அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நான் வருவேன் என்று நினைக்கவில்லை – ஈபிஎஸ்

Default Image

அதிமுக இடைக்கால பொது செயலாளராக வருவேன் என்று நினைக்கவில்லை என ஈபிஎஸ் பேச்சு. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற  நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக இடைக்கால பொது செயலாளராக வருவேன் என்று நினைக்கவில்லை. நம்முடன் இருந்து கொண்டே சூழ்ச்சி செய்து நமது வெற்றியை தடுக்க பார்த்துள்ளனர். உண்மை விசுவாசிகளின் உழைப்புடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்