அதிமுக இனி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு இல்லை – கே.பாலகிருஷ்ணன்

Default Image

அதிமுக 3 கூறுகளாக பிரிந்து விட்டது எனவே இனி அதிமுக ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே இல்லை கே.பாலகிருஷ்ணன் பேட்டி. 

அதிமுகவில் தொடர்ந்து குழப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அதிமுக 3 கூறுகளாக பிரிந்து விட்டது எனவே இனி அதிமுக ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே தற்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிளவுபட்ட நிலையில் காணப்படுகின்றனர் என  தெரிவித்துள்ளார்.

மேலும்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவேந்தராக உள்ள அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு இல்லாமலே விழா ஏற்பாடு செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் தொடர்பாக என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்