#BREAKING : பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே..!

Default Image

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி உள்ளனர்.

இலங்கையில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்