#Breaking:இரட்டைத் தலைமை ரத்து – இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு!

Default Image

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக,எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும்,ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பதவிகளை ரத்து செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்