தொடங்கியது பொதுக்குழு கூட்டம்..! ஓபிஎஸ் கலந்து கொள்வாரா..?

அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. 

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில், செயற்குழு கூட்டம்நடைபெறுகிறது. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கூட்டத்திற்கு வருகை தரவில்லை. தற்போது ஓபிஎஸ் அதிமுக  அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment