#Breaking:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் வீட்டில் ஐடி ரெய்டு!
கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,தற்போது 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,சோதனையின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள்,எதற்காக சோதனை? உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.ஐடி சோதனைக்குள்ளான சந்திரசேகர் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் உள்ளார்.
முன்னதாக,கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய அவரது சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர் சந்திர சேகர் ஆகியோரின் இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி,உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.