வயிற்றெரிச்சல் தான் இப்படியெல்லாம் பேசச்சொல்கிறது..! நயினார் நாகேந்திரன் கருத்து குறித்து ஜோதிமணி எம்.பி ட்வீட்..!

Default Image

பாஜகவுக்குத் தெரிந்ததெல்லாம். பிரிப்பது மட்டும் தான் என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

நேற்று திமுகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவுக்குத் தெரிந்ததெல்லாம். பிரிப்பது மட்டும் தான். அப்படிப் பிரித்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது .அந்த வயிற்றெரிச்சல் தான் இப்படியெல்லாம் பேசச்சொல்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்