#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? – ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Default Image

அதிமுகவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,அந்த உத்தரவை மீறி பொதுக்குழு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.ஆனால்,கடந்த ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருத்தும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில்,அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தனி நீதிபதியை அணுக வேண்டும் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில்,ஜூலை 7 ஆம் தேதிக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.இந்த வழக்கை ஒத்தி வைக்க கோரிய ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று,பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.மேலும்,நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது எனவும்,அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் 7 ஆம் தேதி ஈபிஎஸ் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்