#ENGvIND:5-வது டெஸ்ட் போட்டி- உலக சாதனை படைத்த பும்ரா;அதிரடி காட்டிய ஜடேஜா!

Default Image

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,புஜாரா களமிறங்கிய நிலையில்,இருவரும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்களிலும்,கோலி 11 ரன்களிலும் விக்கெட்டை இழக்க,அதன் பின்னர்,களம் கண்ட ரிஷப் பண்ட் நான்கு சிக்சர்கள்,20 பவுண்டரிகளுடன் 146 ரன்களும்,ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் எடுத்து அணிக்கு ரன்கள் சேர்த்தனர்.

இதனையடுத்து,இறங்கிய வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா,இங்கிலாந்து வீரர் ஸ்டூவர் பிராட் வீசிய ஓவரில் மட்டும் 35 ரன்களை விளாசினார்.இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக,இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை யுவ்ராஜ் சிங் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இங்கிலாந்து அணி 27 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,மழையால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்