தமிழக அரசின் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

Default Image

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல். 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்