மக்களே கவனமாக இருங்க…மீண்டும் 18,819 ஆக எகிறிய கொரோனா;39 பேர் பலி;1 லட்சத்தை தாண்டிய சிகிச்சை!

Default Image

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 14,500 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,819 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,602-லிருந்து தற்போது 1,04,555 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று 30 பேர் பலியான நிலையில்,கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,116 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 13,827 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,22,493 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,97,61,91,554 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 14,17,217 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்