3,552 காலிப் பணியிடங்கள்…சீருடைப் பணியாளர் தேர்வு – இன்று அறிவிப்பு வெளியீடு!

Default Image

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 3,552 சீருடைப் பணியாளர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது.அதன்படி,இரண்டாம் நிலைக் காவலர்,சிறைக் காவலர்,தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து,https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,முதல் முறையாக தமிழ் மொழி தகுதித் தேர்வை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,தமிழக காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 25,26 ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்