#Flash:3 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

Default Image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ(DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்,என்இயு-சாட்(NeuSAR, SAR),ஸ்கூப் 1 உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் நாளை( ஜூன் 30 ஆம் தேதி) விண்ணில் செலுத்த உள்ளது.அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி53 விண்கலம் மாலை 6 மணிக்கு புறப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு,பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.இதனிடையே,DS-EO என்பது 365 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் என்றும்,NeuSAR ஆனது 155 கிலோ எடை கொண்டது என்றும்,இவை இரண்டும் சிங்கப்பூரை சேர்ந்தவை எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும்,மூன்றாவது செயற்கைக்கோள் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTU) 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்