அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆசையா? – தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு
அரசு விழாக்களில் நிகழ்வுகளை தொகுத்து வழங்க ஆர்வமுடையவர்களுக்கு தமிழக அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமுடையவர்களுக்கு தமிழக அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமும், விருப்பமுடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தங்கள் துறையில் பணியாற்றி வரும் தூயத் தமிழில்/ஆங்கிலத்தில் பேசக்கூடியவராகவும், நல்ல குரல் வளத்துடன் கூடிய ஆர்வமுடையோர் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரியில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை அனைத்து பணியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்வைக்காக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது