#JustNow: பரபரப்பு.. கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை!

கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு.

கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியுள்ளனர். சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து அலுவலகம் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏந்திருந்தாக கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றசாட்டியுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி அது வன்முறையாகவும் வெடிக்கிறது. சமீபத்தில் முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியது. இதற்கு பதிலடியை வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடதுசாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடினார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றசாட்டியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment