டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Default Image

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சார்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகின்றன என புகார்கள் எழுந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வண்ணம் நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்து விட்டு கூடுதல் கட்டணமான ரூ.10-ஐ திரும்ப பெறும் நடைமுறை மே 15 ஆம் தேதி முதல்அமலுக்கு வந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். இந்த திட்டத்தை வகுத்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிடுமாறும்  நீதிபதிகள்  அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்