ரூ.10 நாணயம் செல்லும்..! விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு..!

Default Image

ரூ.10 நாணயம் செல்லும் என விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் 10 ரூபாய் நாணயம் செல்லும் என அறிவிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் மத்தியில் இந்த நாணயம் செல்லாது என்ற எண்ணம் வருகிறது.

அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஆரூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் மழலையர் பள்ளி  வைத்து நடத்தி வருகிறார். அவரது தாயார் வீட்டிலேயே சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களது கடையில் கொடுக்கப்படும் பத்து ரூபாய் நாணயங்கள் மற்றும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை சேகரித்து மொத்தம் ரூ.6 லட்சம் சேமித்து கார் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி நீங்கி, இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்