#BREAKING: அதிமுக விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி வழக்கு!

Default Image

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு.

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்துள்ளனர். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை ஓபிஎஸ், இபிஎஸ் நடத்த தடை விதிக்கவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கவும், புதிதாக பதவிகளில் நியமிக்கவும் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது கட்சி விதிக்கு எதிரானது. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் தந்து நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்