#Breaking:அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்;கழகத்தின் காவலரே,ஒற்றை தலைமையே என முழக்கமிட்ட தொண்டர்கள்!

Default Image

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு,சென்னை,அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதன்படி,பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.

இந்தா பரபரப்பான நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.தனது இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்த நிலையில்,தற்போது ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.மேலும்,தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், கட்சி அலுவலகம் முன்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு அவருக்கு ஆதரவாக ‘கழகத்தின் காவலரே,ஒற்றை தலைமையே’ என முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம்,அதிமுக அலுவலகம் செல்லாத ஈபிஎஸ்,கிரீன்வேஸ் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  * இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம்,விஜயபாஸ்கர்,முக்கூர் சுப்ரமணியன்,செல்லூர் ராஜூ,மோகன், பி.வி.ரமணா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்