செஸ் ஒலிம்பியாட் – ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

Default Image

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். 

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஜூன் 19)  மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளது. 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இவ்விழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்