#BREAKING: அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை!

Default Image

திமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்பி உதயகுமார், பொன்னையன் உள்ளிட்ட தீர்மானக்குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர்கள்  எம்ஜிஆர், ஜெயலலிதா போல் இனி அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் சூடுபிடித்துள்ளது. ஒற்றைத் தலைமைக்கு பெருமளவில் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்