ஆளுநர் பொறுப்பை துறந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் – முத்தரசன்
21 மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்கு உரியது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக இருக்கும்.
இதுகுறித்து முத்தரசன் அவர்கள் தமிழக ஆளுநர் பொறுப்பை துறந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே சனாதான தர்மம் கூறுகிறது என்ற கருத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டுமென்றும், 21 மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்கு உரியது என்றும் தெரிவித்துள்ளார்.