#BREAKING: கோயில் கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுப்பு!

Default Image

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் எதிர்ப்பு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணை குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தீட்சிதர்கள் கோயில் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறையின் விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்குகள் தொடர்பாக ஆய்வு நடத்த அறநிலையத்துறையின் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனால் கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வரும் நிலையில், கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்த நிலையில் விவரங்களை தர மறுத்துள்ளனர். 5 பேர் கொண்ட அறநிலையத்துறை விசாரணை குழுவினர், இன்றும், நாளையும் ஆய்வு செய்வதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்திருந்தனர். சிதம்பரம் கோயிலில் ஆய்வு நடத்த சட்ட ரீதியாக அறநிலையத்துறை அணுகவில்லை என தீட்சிதர்கள் குற்றசாட்டியுள்ளனர். கோயிலில் 2009ல் நடந்த கணக்கு தண்ணிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்