பிரபல பாப் பாடகர் கொடூரமாக சுட்டுக்கொலை.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Default Image

பஞ்சாப்பின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா நேற்று பஞ்சாபின் மன்சா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அவரின் இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர்.  சித்து மூஸ்வாலா தனது இரண்டு நண்பர்களுடன் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர் சென்ற கார் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்துள்ளது. காயமடைந்த அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பல அசத்தலான பாப் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த சித்து மூஸ் வாலா பாடகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மன்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

விஐபி கலாச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் பஞ்சாப், பகவந்த் மான் அரசு சித்து மூஸ் வாலா உட்பட 424 விஐபிக்களின் பாதுகாப்பை திரும்ப பெற்றது. பாதுகாப்பை திரும்ப பெற்ற மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. இவரது மறைவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்