எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்று தந்தவர் எனது தந்தை – ராகுல் காந்தி உருக்கம்

Default Image

எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என ராகுல் காந்தி ட்வீட். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.  இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தனத்தை குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கு அற்புதமான தந்தை. மன்னிப்பின் மதிப்பை கற்றுக்கொடுத்தவர். நாங்கள் ஒன்றாக கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்