#BREAKING: குரூப் தேர்வு.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி – டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

Default Image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மே 21ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டிருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்சிகளை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்