#Breaking:பரபரப்பு…போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Default Image

கடலூர் புதுச்சத்திரத்தில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 70 இருசக்கர வாகனங்கள்,7 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நேற்று இரும்பு தளவாட பொருட்கள் திருடப்படுவதை தடுக்க வந்த காவல்துறையினரை விரட்டுவதற்காக 50 பேர் கொண்ட திருட்டு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர்.எனினும், காவல்துறையினர் யாருக்கும் எந்த சேதமும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,அந்த கொள்ளை கும்பலை தேடும் பணியை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.மேலும்,கொள்ளை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir