#அன்னையர் தினம்:’அம்மா’ என்று சொன்னாலே இவரது உருவம்தான் – டிடிவி தினகரன் வாழ்த்து!

Default Image

தியாகத்தின் மொத்த உருமாய்,வாழும் தெய்வமாய் நம் அனைவருக்கும் பிடித்தவருமான வார்த்தைகளால் ஒப்பிடமுடியாத அன்னையர்களின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில்,நாடு முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்,தங்களை பெற்ற அன்னையர்களுக்கு பிள்ளைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதே சமயம்,தாயாக சிறந்து விளங்கும் அனைவருக்கும் அரசியல் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தியாகத்தின் திருவுருவமாக இருக்கும் அன்னையர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னையர் தின வாத்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,தனது வாழ்த்து அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தியாகத்தின் திருஉருவமாக,தாய்மை எனும் பெருங்குணத்தோடு அன்பு காட்டுகிற அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அவர்,எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், பாசாங்கு இல்லாத பாசமும் கொண்டதுதான் தாய்மை எனவும் அத்தகைய தாய்மையோடு மறைந்தும் மறையாது தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் வாழ்பவர் நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்றும் கூறியுள்ளார்.மேலும்,’அம்மா’ என்று சொன்னாலே அனைவரின் மனக்கண்ணிலும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் உருவமே தோன்றுகிற அளவுக்கு இடம்பிடித்த நம் அம்மா அவர்களை இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம்,அம்மா அவர்கள் காட்டிய வழியில் பயணித்து, தாய்மையை எந்நாளும் மகிழ்ந்து கொண்டாடுவோம்.தூய்மையான தாயுள்ளத்தோடு நம்மிடம் அன்பு காட்டி, ஆசிர்வதிக்கும் வணங்கிடுவோம்”,என்றும் டிடிவி கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்