#Breaking:தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு- இல்லத்தரசிகள் ஷாக்!

Default Image
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.
இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.448 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.அதன்பின்னர்,நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்துள்ளது. இதனால்,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,877-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து,கிராம் ரூ.66.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்