செஸ் ஒலிம்பியாட் போட்டி – ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

Default Image

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதன்பின் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்திய அணியின் ஆலோசராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க, நிறைவு விழாவிற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.92.13 கோடி ஒதுக்கிய நிலையில், விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கூடுதலாக ரூ.15 கோடி தர அரசிடம் இந்திய செஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்