உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துங்கள் – பிரதமர் மோடி

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 3 நாள் பயணமாக அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று ஜெர்மனி சென்ற அவர், இன்று டென்மார்க்  சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், டென்மார்க் பிரதமரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மேற்கொண்டு சுமுகமான தீர்வை பெற வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.