யுஸ்வேந்திர சாஹலை எனது மூத்த சகோதரரை போல நினைக்கிறன் .., குல்தீப் யாதவ் பேச்சு…!

ஐபிஎல் சீசன் 15 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு பின்பதாக கொல்கத்தா அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.  அப்பொழுது பேசிய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் தன் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடம் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஊதா நிற தொப்பி யார் வாங்க வேண்டுமென நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு பதிலளித்த அவர், யுஸ்வேந்திர சாஹல் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். ஏனென்றால், தனக்கு ஏற்பட்ட கடினமான காலங்களில் அவர் தனக்கு ஆதரவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal