ஐபிஎல் 15 -வது சீசனில் முதன்முறையாக போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரீத்தி சிந்தா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!

Default Image

ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

பஞ்சாப் அணி 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு முதல் முறையாக மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை பார்த்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் முதல் முறையாக நேற்று தான் அவர் மைதானத்திற்கு போட்டியை காண வந்துள்ளார். அப்போது தனது அணியினருக்கு கொடிகளை காண்பித்து உற்சாகப்படுத்திய ப்ரீத்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்