#AIADMKELECTION: மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்!

Default Image

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டி.

அதிமுக உட்கட்சித் தேர்தலில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளை தேர்வு தேர்வு செய்வதற்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்