அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Default Image

திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என முதல்வர் ட்வீட்.

இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி, ஜோதிமணி எம்.பி ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி! ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்! ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்