100 பேருக்கு கல்வி கொடுக்காமல் என் உயிரை கொடுக்கமாட்டேன்.! KPY பாலா

Default Image

விஜய் தொலைக்காட்சி வருடம் வருடம் விருது நிகழ்ச்சி நடத்தி விஜய் டிவியில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் அதைபோல் விருது வழங்குகிறார்கள். இந்த விருது நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி மதியம் 3-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தினம் தினம் ப்ரோமோ வீடியோவை  வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் பாலா விருது வாங்குவதற்கான காட்சி உள்ளது. இதுமட்டுமில்லாமல் பாலா ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் மாணவர்களின் படிப்பிற்கும், முதியோர்களுக்கும் உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அவருக்கு வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் விருதை வழங்கினார். விருதை வாங்கி கொண்டு பேசிய பாலா ” இதை விட பெரிய விருது என்னவென்றால், 100 பேருக்கு கல்வி கொடுக்காமல் என் உயிரை கொடுக்கமாட்டேன் என்று கடவுளிடம் சொல்றேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்வித்து, மகிழ்ச்சி அடைவது ஒரு வகை வரம். மேலும் உயர்ந்திட, உன் சேவைகள் தொடர்ந்திட, எங்கள் வாழ்த்துக்கள் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்