மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு, ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை!

Default Image

எல்.முருகன் தனது போக்கை திருத்தி கொள்ளாவிட்டால் திமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை.

தேவையில்லாமல் திமுகவை வீண் வம்புக்கு இழுக்கவேண்டாம் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொறுப்பான பதிவில் உள்ள எல் முருகன் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. முரசொலி நிலம் பற்றிய அவதூறு பேச்சுக்காக வரும் 22ம் தேதி எல் முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக மீது அவதூறாக பேசுவதையும், கருத்து தெரிவிப்பதையும் வாடிக்கையாக எல் முருகன் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கை தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும் எல்.முருகன் தனது போக்கை திருத்தி கொள்ளாவிட்டால் திமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்