டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று .., ரத்து செய்யப்பட்ட புனே பயணம்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் 15 வது தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டும் மோத உள்ளன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியில் ஏற்கனவே இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாவதாக டெல்லி கேப்பிடல் அணியை சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே டெல்லி கேப்பிடல் அணி வீரர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே தனித்தனியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். மேலும், அவர்கள் நாளை நடைபெற உள்ள போட்டியில் கலந்துகொள்ள மும்பை செல்ல தயாராக இருந்த நிலையில், வீரர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal