ஜூலை மாதம் முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – பஞ்சாப் அரசு அதிரடி!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், அதில் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதையும் தற்பொழுது நிறைவேற்றவுள்ளது.

அதன்படி பஞ்சாப்பில் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.