கனடாவில் கொல்லப்பட்ட மாணவனின் உடல் நாளை இந்தியா வருகை!

Default Image

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல்.

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்று அவரது தந்தை ஹிதேஷ் வாசுதேவ் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ காவல்துறை கூறியுள்ளது என்றும்  இதன் காரணமாக அடுத்த விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் எனவும் மாணவனின் தந்தை கூறினார்.

கடந்த 7-ஆம் தேதி வியாழக்கிழமை மாணவன் கார்த்திக் வாசுதேவ், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பேருந்தைப் பிடித்து பகுதிநேர பணிக்காக டோரண்டோ சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இந்த கொலைக்கான காரணம்ப ற்றி தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இறந்த மாணவனின் உடல் உடலை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டொராண்டோ காவல்துறை தெரிவித்த நிலையில், உடல் நாளை தாயகம் கொண்டுவரப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips
KKR VS LSG IPL 2025