ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

Default Image

நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்.

விடியா திமுக அரசின் திறமையின்மையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றசாட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை கோடை மழையில் இருந்து பாதுகாக்க அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் தார்ப்பாய் வழங்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது குறிப்பிட்டவாறு, மழையால் நெல்மணிகள் வீணாவதை தடுக்கும் வகையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் இனி திறந்த வெளியில் எங்கும் சேமிக்கப்படாமல், நேரடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும். மேலும், கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய விதிகள் பின்பற்றப்படுகின்றன. புதிய நேரடி கொள்முதல் நிலையங்களை உருவாக்க பல்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்