தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

Default Image

தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.

பள்ளிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 4 நாட்கள் விடுமுறையின்போது, பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்