பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மோதல் ஏற்பட்டதால் பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நேற்று நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சென்னை, சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு அணிவித்தபோது மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கும்போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 150 பேர் மீது கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக செயல்படுதல், ஆயுதங்கள், காயம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.
இதுபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 50 பேர் மீதும், விசிக நிர்வாகிகள் 30 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், மோதலில் ஈடுபட்டது மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக, விசிக மீது தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025