#IPL2022: தடுமாறிய ராயல்ஸ்.. 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே பட்லர் அதிரடியாக ஆடத்தொடங்கினார். மறுமுனையில் இருந்த படிக்கல் டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து களமிறங்கிய அஸ்வின், 8 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் விலாச, அவரின் விக்கெட்டை வீழ்த்தியே ஆகவேண்டும் என ராஜஸ்தான் அணி ஏங்கிக்கொண்டிருந்தது. அதன்படி லாக்கி வீசிய பந்தில் 54 ரன்கள் அடித்து பட்லர் ஸ்டம்ப் அவுட் ஆகினார்.

பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர் 29 ரன்களிலும், ரியான் பராக் 18 ரன்களிலும், ஜேம்ஸ் நீசம் 17 ரன்கள் அடித்து தங்களின் விக்கெட்டை இழக்க, அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியான 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.