அம்பேதக்கர் சிலைக்கு மரியாதை – பாஜக, விசிகவினர் மோதல்!

Default Image

சென்னை கோயம்பேட்டில் பாஜகவினர் – விசிக தொண்டர்கள் மோதல்.

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக, விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ஒரேநேரத்தில் பாஜக – விசிகவினர் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று சென்னை கோயம்பேட்டில் பாஜகவினரும், விசிகவினரும் ஒருவரையொருவர் கற்களை கொண்டு தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கொடியை அகற்றிவிட்டு விசிக கொடியை ஊன்ற முற்பட்டபோது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இருதரப்பு மோதலில் பாஜகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் கூட்டத்தை களைக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்