#Breaking:முக்கிய கோரிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்!

கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து,மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்,அக்கடிதத்தில்,இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் தமிழக மீனவர்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் மட்டுமே தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் 1 கோடி கேட்டுள்ள விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரி மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு கடிதம். pic.twitter.com/FMo2TrSiMr
— AIADMK (@AIADMKOfficial) April 13, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025