#IPL2022: மீண்டும் சென்னை அணி தோல்வி.. முதல் வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. புனேவில் உள்ள DY படில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த கேன் வில்லியம்சன் 40 பந்துகளுக்கு 32 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து அதிரடியாக அடிவர, 50 பந்துகளில் 75 ரன்கள் அடித்து மிரட்டினார், அபிஷேக் ஷர்மா.

இறுதியாக ஹைதராபாத் அணி, 17.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், அடுத்த நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri