சோகம் – கர்நாடகாவில் AC வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

Default Image

கார்டாகவில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு.

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மாரியம்மனஹள்ளி கிராமத்தில் வீட்டில் உள்ள AC வெடித்து தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. AC வெடித்ததால் விஷ வாயு கசிந்தததா? அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தார்கள் என்று போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஏசியில் இருந்து வாயு கசிந்ததால் தீ பரவி, மின்சார ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி டி.சந்திரகலா (38), அவர்களின் மகன் ஆத்விக் (6) மற்றும் மகள் பிரேரனா (8) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இறந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஏதேனும் கடன்கள் இருந்ததா அல்லது குடும்பம் ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்ததா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi