#TNAssembly:தமிழக சட்டப்பேரவையில் இன்று – எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்ப திட்டம்!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக,நகைக்கடன் தள்ளுபடி,பயிர்க்கடன்,பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.மேலும்,இன்றைய தினத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் புதிய அறிவிப்புக்களை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்