#BREAKING: ஆந்திர முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா!

Default Image

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் முதல்வர் ஜெகன்மோகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அமைச்சரவை மாற்றியமைக்கும் வகையில் புதிய அமசகர்களின் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

ஆந்திராவில் முதல்வர் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சி அமைத்து அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்தார். அதன்படி, இறுதி அமைச்சரவை கூட்டம் முடிந்ததை தொடர்ந்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்போது ராஜினாமா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்